முகப்பு
இந்தியா

ஜான்ஸன்ஸ் பேபி ஷாம்புவில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம்? மத்திய அரசு ஆய்வு

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடைகளில் விற்பனைக்கு வந்துள்ள ஜான்ஸன்ஸ் பேபி ஷாம்பு மாதிரிகளை இந்தியாவின தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் ஆய்வு செய்யவுள்ளது.

Updated On : 2 ஏப்ரல், 2019 at 3:38 PM
பகிர்:


புது தில்லி: இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடைகளில் விற்பனைக்கு வந்துள்ள ஜான்ஸன்ஸ் பேபி ஷாம்பு மாதிரிகளை இந்தியாவின தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் ஆய்வு செய்யவுள்ளது.

ராஜஸ்தானில் மருந்து ஒழுங்குமுறை ஆணையம் நடத்திய சோதனையில், நோ டியர்ஸ் என்ற விளம்பரத்துடன் வரும் குழந்தைகளுக்கான ஜான்ஸன்ஸ் ஷேம்புவில் புற்றுநோயை உருவாக்கும் ஃபார்மால்டிஹைடி எனும் ரசாயனம் கலந்திருப்பது இரண்டு வெவ்வேறு மாதிரிகளில் உறுதிபடுத்தப்பட்டதை அடுத்து மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் ஷாம்பு மாதிரிகளை சேகரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஈஸ்வர ரெட்டி தெரிவித்துள்ளார்.

Advertisement

ஒருவேளை சோதனையில் சம்பந்தப்பட்ட ரசாயனம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டால், உடனடியாக சந்தையில் இருந்து ஷாம்பு திரும்ப பெற வேண்டும் என்று உத்தரவிடப்படும் எனக் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.