இந்தியா

தேர்தல் பணியில் ராணுவம்: குடியரசுத் தலைவருக்கு கடிதம் வந்தது செய்தியல்ல புரளி!

இந்திய ராணுவத்தை தேர்தல் பணிக்கு பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ராணுவ வீரர்கள், குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியதாக வெளியான தகவல் செய்தியல்ல. வெறும் புரளி.

ANI


புது தில்லி: இந்திய ராணுவத்தை தேர்தல் பணிக்கு பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ராணுவ வீரர்கள், குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியதாக வெளியான தகவல் செய்தியல்ல. வெறும் புரளி.

குடியரசுத் தலைவர் மாளிகையும் இது குறித்து அளித்திருக்கும் விளக்கத்தில், மக்களவைத் தேர்தல் பணிக்கு இந்திய ராணுவம், விமானப்படை, கப்பற்படையை பயன்படுத்துவதற்கு கண்டனம் தெரிவித்து முன்னாள் ராணுவ அதிகாரிகள் கடிதம் அனுப்பியிருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதுபோன்ற எந்தவொரு கடிதமும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வரவில்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளது.

அதே போல, ராணுவ முன்னாள் அதிகாரிகளும், இதுபோன்றதொரு எந்தக் கடிதத்தையும் எங்கள் தரப்பில் இருந்து அனுப்பவில்லை. இது முற்றிலும் பொய்யான தகவல் என்று தெரிவித்துள்ளனர்.

இந்திய ராணுவத்தின் ஓய்வு பெற்ற முக்கிய அதிகாரிகள் 8 பேர் கையெழுத்திட்டு குடியரசுத்  தலைவருக்கு அனுப்பியதாக ஒரு கடிதம் இன்று காலை முதல் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியதை அடுத்து இரு தரப்பில் இருந்தும் மறுப்பு விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

மேலும், இந்த கடிதம் விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இதுபோன்ற எந்தவொரு கடிதமும் எழுதப்படவில்லை. அப்படி ஒரு கடிதத்தில் எழுதப்பட்டிருக்கும் எந்த விஷயமும் ஏற்றுக் கொள்ள முடியாததாக உள்ளது என்றும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்தில் தாயைப் பிரிந்த பெண் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த ‘பிங்க்’ ரோந்து போலீஸாா்

புன்செய்தாமரைக்குளம் கிராமத்தில் மண் அள்ள எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

அதிமுக தோ்தல் வாக்குறுதி: விசைத்தறியாளா்கள் சங்கம் வரவேற்பு

விஜய்க்கு ஆதரவாக எம்ஜிஆா் அதிமுக செயல்படும்: புதிய கட்சியை தொடங்கி வைத்து பண்ருட்டி ராமச்சந்திரன் பேச்சு

திருப்பூரில் தீவிர கண்காணிப்பில் வங்கதேசத்தினா்

SCROLL FOR NEXT