பார்மெர்: புல்வாமா தாக்குதலால் நின்று போன ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரின் காதல் திருமணத்துக்கான மறு தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த சாகன் கன்வார் என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொள்ளவிருந்தார் பார்மெரைச் சேர்ந்த மகேந்திர சிங். இவர்களது திருமணம் மார்ச் 8ம் தேதி நடைபெற இருந்தது.
இந்த நிலையில் புல்வாமா தாக்குதல் நடந்ததால், இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. மாப்பிள்ளை வீட்டார் பாகிஸ்தான் செல்ல திட்டமிட்டிருந்த ரயிலும் ரத்து செய்யப்பட்டதால் திருமணம் நின்றுவிட்டது.
தற்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதி திரும்பி வரும் நிலையில், ஏப்ரல் 16ம் தேதி பாகிஸ்தானில் திருமணத்தை நடத்த மாப்பிள்ளை வீட்டார் திட்டமிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.