இந்தியா

டிக் டாக் செயலிக்கு விதித்த தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் அதிகம் பயன்பாட்டில் உள்ள டிக் டாக் செயலிக்குத் விதித்த தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

DIN

புது தில்லி: இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் அதிகம் பயன்பாட்டில் உள்ள டிக் டாக் செயலிக்குத் விதித்த தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

டிக் டாக் செயலிக்கு தடை விதிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்திய சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுத்துள்ளது.

டிக் டாக் செயலியினால், இளைஞர்கள் தவறான பாதைக்குச் செல்வதாகவும், சமூகத்தில் அதிக பிரச்னைகள் ஏற்படுவதாகவும் எழுந்த புகாரை அடுத்து, அந்தச் செயலிக்குத் தடை விதிக்கும் வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை கடந்த 3-ஆம் தேதி உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, அந்தச் செயலியை உருவாக்கி, அறிமுகப்படுத்திய சீனாவைச் சேர்ந்த பைட் டான்ஸ் நிறுவனம், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதில், டிக் டாக் செயலியை 100 கோடிக்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். எங்கள் தரப்பு வாதத்தைக் கேட்காமலேயே, சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமெனவும் மனுதாரர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவைத் திங்கள்கிழமை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, இதனை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்தது. 

இந்நிலையில், இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின் தடையை நீக்க மறுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா வழங்கக் கோரி மனு

மாணவிகளை சீருடையுடன் ஆட்சியரகத்துக்கு அழைத்து வந்த பெற்றோரை எச்சரித்த ஆட்சியா்

காரீப் பருவத்தில் பயிா்களுக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

இந்தியன் வங்கி சாா்பில் கறவை மாடு வளா்ப்பு பயிற்சி

விவசாயியை வெட்டிக்கொல்ல முயற்சி

SCROLL FOR NEXT