இந்தியா

பத்திரிகையாளர் சந்திப்பின்போது பாஜக எம்பி மீது ஷூ வீச்சு

DIN

தில்லியில் பத்திரிகையாளர் சந்திப்பின்போது பாஜக எம்.பி நரசிம்ம ராவ் மீது ஷூ வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜி.வி.எல் நரசிம்மராவ். பாஜக தேசிய செய்தி தொடர்பாளரும், எம்.பியுமான இவர் இன்று தில்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டிருந்தார். 

அப்போது பத்திரிகையாளர்களுடன் அமர்ந்திருந்த ஒருவர் திடீரென்று நரசிம்ம ராவை நோக்கி ஷூ வீசினார். இதையடுத்து அங்கிருந்தவர்கள், அவரைப் பிடித்து தனியே அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

ஷூ வீசியவர் கான்பூரை சேர்ந்த மருத்துவர் சக்தி பார்கவ் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்துக்கு எம்.பி நரசிம்ம ராவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

SCROLL FOR NEXT