முகப்பு
இந்தியா

பயங்கரவாதத்துக்கு நிதி: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் எம்எல்ஏ-க்கு போலீஸ் காவல்

பயங்கரவாதத்துக்கு நிதி வழங்கிய விவகாரத்தில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் எம்எல்ஏ ரஷீத் இன்ஜினியர்க்கு போலீஸ் காவல் விதிக்கப்பட்டது.

Updated On : 10 ஆகஸ்ட், 2019 at 4:18 PM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 3:16 PM

பயங்கரவாதத்துக்கு நிதி வழங்கிய விவகாரத்தில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் எம்எல்ஏ ரஷீத் இன்ஜினியர்க்கு போலீஸ் காவல் விதிக்கப்பட்டது.

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் விதமாக நிதி வழங்கிய விவகாரத்தில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் எம்எல்ஏ ரஷீத் இன்ஜினியர், தேசிய புலனாய்வு முகமையால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். 

இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ரஷீத் இன்ஜினியர் சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, இவ்வழக்கு தொடர்பாக ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தில்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது.   

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.