முகப்பு
இந்தியா

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி புறப்பட்டுச் சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு காணப்பட்டது. 

இந்தியா

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி புறப்பட்டுச் சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு காணப்பட்டது. 

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:48 AM
பகிர்:

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி புறப்பட்டுச் சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு காணப்பட்டது. 

நாக்பூரில் இருந்து தில்லிக்கு இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட இருந்தது. இந்த விமானத்தில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி உள்பட ஏராளமான பயணிகள் இருந்தனர்.

ஓடுபாதையில் இருந்து விமானம் புறப்படும் முன் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார்.உடனே இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு அவர் தகவல் கொடுத்தார்.

இதையடுத்து அந்த விமானம் ஓடுபாதையில் இருந்து விமானங்கள் நிற்கும் இடத்துக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் விமானத்தில் இருந்து மத்திய அமைச்சர் கட்கரி உள்பட அனைத்து பயணிகளும் பத்திரமாக இறக்கப்பட்டனர்.

இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →