முகப்பு
இந்தியா

கேரளாவைத் தொடர்ந்து டிக்டாக்கில் இணைந்த உத்தரகண்ட் காவல்துறை: அட இது வேற விஷயம்!

சாதாரண மக்களையும் சென்றடைந்த சமூக வலைத்தளங்களில் தற்போது முதல் இடத்தில் இருப்பது டிக்டாக் தான். அதனால்தான் கேரளாவைத் தொடர்ந்து உத்தரகண்ட் காவல்துறையும் அதில் இணைந்துள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:50 AM
பகிர்:


டேஹ்ராடூன்: சாதாரண மக்களையும் சென்றடைந்த சமூக வலைத்தளங்களில் தற்போது முதல் இடத்தில் இருப்பது டிக்டாக் தான். அதனால்தான் கேரளாவைத் தொடர்ந்து உத்தரகண்ட் காவல்துறையும் அதில் இணைந்துள்ளது.

அதாவது, பொதுமக்களை எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் டிக்டாக் அமைந்துள்ளது. எனவே, பொதுமக்களை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்ள டிக்டாக் விடியோ அமையும் என்று நாங்கள் கருதுகிறோம். சாலைப் பாதுகாப்பு, மகளிர் பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து உத்தரகாண்ட் காவல்துறையினர் டிக்டாக் விடியோ மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்துள்ளதாக உத்தரகண்ட் சட்டம் ஒழுங்கு காவல்துறை ஆணையர் அசோக் குமார் கூறினார்.

ஏற்கனவே, இதுபோன்ற விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள கேரளா காவல்துறையும் டிக்டாக் விடியோவில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.