இந்தியா

'தாவி' ஆற்று வெள்ளத்தில் சிக்கியவர்களை தீரத்துடன் மீட்ட இந்திய விமானப் படை

ஜம்முவில் பாய்ந்து ஓடும் 'தாவி' ஆற்றில் பொதுமக்கள் சிலர் குளித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது.

DIN


ஜம்முவில் பாய்ந்து ஓடும் 'தாவி' ஆற்றில் பொதுமக்கள் சிலர் குளித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது.

திடீரென வந்த வெள்ளத்தில் இருந்து தப்பிக்க,'தாவி' ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் இரண்டு பேர் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தாவி குதித்து ஆற்றுக்கு நடுவே இருந்த சுவற்றில் ஏறிக் கொண்டனர்.

தங்களைக் காப்பாற்றுமாறு அவர்கள் கூக்குரலிட்டனர். தீயணைப்புப் படையினர், மீட்புப் படையினர் வந்தும் பலனில்லை. உடனடியாக இந்திய விமானப் படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் தெரிவிக்கப்பட்டு இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விரைந்து வந்தது. அதில் இருந்து வீரர் ஒருவர் தன்னுயிரை பணயம் வைத்து அந்த சுவரில் இறங்கி, இளைஞர்களை கயிறு மூலம் கட்டி ஹெலிகாப்டர் உதவியோடு மீட்டார்.

இந்த விடியோவை இந்திய விமானப் படை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. ஊடகங்களிலும் இந்த செய்தி இன்று வைரலாகி வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டினுள் புகுந்து மூதாட்டியிடம் 9 பவுன் நகைகள் பறிப்பு

ஸ்ரீரங்கம் கோயிலில் உண்டியல் காணிக்கையை திருடிய பணியாளா் கைது

மாசி மகத் திருவிழா தஞ்சாவூா் மாவட்டத்துக்கு மாா்ச் 2 உள்ளூா் விடுமுறை!

மாணவிக்கு பாலியல் தொல்லை அரசுப் பள்ளி ஆசிரியா் கைது

புதுகை அருகே சாலையோரம் கிடந்த பெட்டியால் பரபரப்பு

SCROLL FOR NEXT