இந்தியா

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்களவைக்கு போட்டியின்றித் தேர்வு 

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

IANS

ஜெய்ப்பூர்: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யபட்ட பாஜக உறுப்பினரான மதன் லால் சைனி மரணமடைந்ததை தொடர்ந்து அந்த இடம் காலியாக இருந்தது. அந்த இடத்திற்கு காங்கிரஸ் சார்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போட்டியிடுவார் என்று கட்சி அறிவித்தது.

அதையடுத்து மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மன்மோகன் சிங் (86) ஜெய்ப்பூரில் செவ்வாய்க்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார். 

இந்நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சட்டப்பேரவையில் தங்களுக்கு போதிய எண்ணிக்கை இல்லாத காரணத்தால் பாஜக வேட்பாளர் யாரையும் அறிவிக்கவில்லை. எனவே மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் திங்களன்று நிறைவடைந்த நிலையில், மன்மோகன் சிங் போட்டியின்றி மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமக்குள் பிளவை அனுமதிக்காதீர்: முதல்வர் ஸ்டாலின்

ஜன நாயகனுக்காக காத்திருந்தேன்! பராசக்திக்கு வாழ்த்துகள்! அண்ணாமலை பேட்டி! | BJP

”விஜய்க்கு நெருக்கடி கொடுக்கிறோமா?” பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் | TVK | BJP

திருவனந்தபுரம்: திருமண நாளிலேயே சாலை விபத்தில் இளைஞர் பலி

வெளிநாட்டு மாணவர்களுக்கும் இலவச கல்வி அளிக்கும் ஜெர்மனி பல்கலை.கள்!

SCROLL FOR NEXT