இந்தியா

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய நாளை வரை தடை நீட்டிப்பு 

DIN

புது தில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில்,  ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய நாளை வரை தடையை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில்  காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை அவரை காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது 

அதேசமயம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக அமலாக்கப்பிரிவு தனியாக ப.சிதம்பரம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அந்த வழக்கில் செவ்வாய் வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

இந்நிலையில், அமலாக்கப்பிரிவு சார்பில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பானுமதி, போபண்ணா ஆகியோர் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ப.சிதம்பரத்தை புதன்கிழமை வரை அமலாக்கப்பிரிவு கைது செய்யத் தடை விதித்தனர். அத்துடன் சிபிஐ கைதை ரத்து செய்யக்கோரும் சிதம்பரத்தின் மனுவும் நாளை இந்த மனுவுடன் சேர்ந்து விசாரிக்கப்படும் என்று தெரிவித்து வழக்கத்தினை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT