இந்தியா

ஜம்முவின் 5 மாவட்டங்களில் செல்போன் சேவை சீரடைந்தது

ஜம்முவின் 5 மாவட்டங்களில் இன்று ஆகஸ்ட் 5ம் தேதி முதல் நிறுத்தப்பட்டிருந்த செல்போன் சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

ANI

ஜம்மு: ஜம்முவின் 5 மாவட்டங்களில் இன்று ஆகஸ்ட் 5ம் தேதி முதல் நிறுத்தப்பட்டிருந்த செல்போன் சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை இரவு முதல் தோடா, கிஷ்த்வார், ராம்பன், ரஜௌரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் செல்போன் சேவை சீரடைந்துள்ளது.

இது குறித்து ஆளுநர் சத்யபால் மாலிக் கூறுகையில், இந்த தடை நடவடிக்கைகளை மக்கள் புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்ள வேண்டும். நமக்கு செல்போன் சேவை என்பது மிகச் சிறிய விஷயம். குறைவாகவே பயன்படுத்துகிறோம். ஆனால், அதனை பயங்கரவாதிகள் பெரிய அளவில் பயன்படுத்துகிறார்கள். எனவேதான் இந்த தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT