புது தில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிதம்பரம் தொடர்பான விசாரணை ஆவணங்களை உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்தது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்திடம் இதற்கு முன்பு நடத்திய விசாரணையில் கிடைத்த விவரங்கள், கேள்வி - பதில் உள்ளிட்டவற்றை சீலிட்ட கவரில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது அமலாக்கத் துறை.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தின் தரப்பில் அமலாக்கத் துறைக்கு எதிராக தொடரப்பட்ட முன் ஜாமீன் வழக்கில் அமலாக்கத் துறையினர், விசாரணை விவரங்களை இன்று தாக்கல் செய்துள்ளனர்.