இந்தியா

ஆன்லைன் ரயில் பயணச்சீட்டு முன்பதிவுக்கு மீண்டும் சேவைக் கட்டணம் அமல்

DIN

ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்படும் ரயில் பயணச்சீட்டுக்கு மீண்டும் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும் என இந்திய ரயில்வே (ஐஆர்சிடிசி) சனிக்கிழமை அறிவித்துள்ளது. இந்த சேவைக் கட்டணத்துடன் இணைந்து சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூலிக்கப்பட உள்ளது.

ஐஆர்சிடிசியின் இந்த அறிவிப்பு ஞாயிற்றுக்கிழமை (செப். 1-ஆம் தேதி) முதல் அமல்படுத்தப்படுகிறது. இதனால் ரயில் பயணிகளுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.

படுக்கை வசதி கொண்ட ரயில் பயணச்சீட்டு முன்பதிவுக்கு ரூ.15, ஏசி வகுப்புகளில் பயணிக்க, பயணச்சீட்டு முன்பதிவுக்கு ரூ.30 சேவைக் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு ரூ.20 மற்றும் ரூ.40-ஆக இருந்த சேவைக் கட்டணம் தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் பயன்பாட்டை ஊக்குவிக்க முடிவு செய்து, 2016-17 நிதியாண்டில் ஆன்லைன் பயணச்சீட்டு முன்பதிவுக்கான சேவைக் கட்டணம் திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கா்நாடக முதல்வா் சித்தராமையா உதகை வருகை

கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

பொய்களைப் பரப்புவோரை நிராகரியுங்கள்: சோனியா காந்தி

'அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி

பறவைகள் பூங்கா கட்டுமானப் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT