முகப்பு
இந்தியா

ஜார்க்கண்டில் சி.ஆர்.பி.எஃப் படையினரிடையே மோதல்: இரண்டு அதிகாரிகள் பலி; இருவர் படுகாயம்

ஜார்க்கண்டில் சி.ஆர்.பி.எப் பாதுகாப்புப்படையினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், இரண்டு மூத்த அதிகாரிகள் உயிரிழந்தனர். மேலும், இரு வீரர்கள் காயமடைந்துள்ளனர். 

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:28 PM
பகிர்:

ஜார்க்கண்டில் சி.ஆர்.பி.எஃப் பாதுகாப்புப்படையினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், இரண்டு மூத்த அதிகாரிகள் உயிரிழந்தனர். மேலும், இரு வீரர்கள் காயமடைந்தனர்.

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்காக சி.ஆர்.பி.எஃப் படையினர் சிறப்பு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில் திங்கட்கிழமை இரவு 226வது பேட்டலியன் பிரிவைச் சேர்ந்தவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலில், உதவி கமாண்டன்ட் மற்றும் உதவி துணை ஆய்வாளர் இருவரும் உயிரிழந்தனர். மேலும், பாதுகாப்புப்படை வீரர்கள் இருவர் படுகாயமடைந்தனர். அவர்கள் ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

சி.ஆர்.பி.எஃப் படையினரிடையே மோதல் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து சி.ஆர்.பி.எஃப் அதிகாரிகள் மற்றும் மாநில போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →