குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள்: இளைஞரின் 'ஏடாகூட' கேள்விக்கு பெங்களூரு போலீசின் 'பொறுப்பான' பதில்
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வரும் வேளையில் இளைஞரின் 'ஏடாகூட' கேள்விக்கு, ட்விட்டரில் பெங்களூரு போலீஸார் அளித்துள்ள பதில் விவாதத்தைக்ரு உருவாக்கியுள்ளது.
பெங்களூரு: குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வரும் வேளையில் இளைஞரின் 'ஏடாகூட' கேள்விக்கு, ட்விட்டரில் பெங்களூரு போலீஸார் அளித்துள்ள பதில் விவாதத்தைக்ரு உருவாக்கியுள்ளது.
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் தீவிரமடைந்து வன்முறை சம்பவங்களும் நடைபெறுகின்றன. அதனைத் தடுக்க பல்வேறு இடங்களிலும் 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வரும் வேளையில் இளைஞரின் 'ஏடாகூட' கேள்விக்கு, ட்விட்டரில் பெங்களூரு போலீஸார் அளித்துள்ள பதில் விவாதத்தைக்ரு உருவாக்கியுள்ளது.
இதுதொடர்பாக பெங்களூரு போலீசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், 'நகரம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.கல்வி நிலையங்கள், வங்கிகள் மற்றும் சந்தைகள் செயல்படும். எல்லாவிதமான போக்குவரத்து சாதனங்களும் நாளை இயங்கும். அச்சப்படத் தேவையில்லை' என்று பதிவிடப்பட்டிருந்தது.
இந்த டிவீட்டுக்கு பதிலாக இளைஞர் ஒருவர், 'நாளை மதுக் கடைகள் செயல்படுமா? மது கிடைக்குமா?' என்னும் பொருளில் கேள்வி எழுப்பியிருந்தார். அவரது அச்சத்தைப் போக்கும் விதமாக 'நாளை எல்லாம் இயல்பாக நடக்கும் என்று போலீஸார் பொறுப்பாக பதிலளித்தது.
இளைஞரின் அந்தக் கேள்விக்கும் போலீஸின் பதிலுக்கும் ட்விட்டர் பயனாளர்கள் கலவையான விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.