புவனேஸ்வர்: ஒடிஸாவிலும் காய்கறிகள் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது துருக்கி வெங்காயம்.
முதல் முறையாக ஒடிஸாவுக்கு துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம், சந்தைகளுக்கு வந்துள்ளது. இதன் மூலம் ஒடிஸா மக்களும் துருக்கி வெங்காயத்தை ருசிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் இருந்து காய்கறிகள் மற்றும் வெங்காயம் வரத் தொடங்கியிருப்பதும், உலக நாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்திருப்பதன் மூலமும் மெல்ல வெங்காயத்தின் விலை குறைந்து வருகிறது. தற்போது ஒடிஸாவில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.30க்கு விற்பனையாகிறது.
அதே சமயம், மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து உருளைக்கிழங்கு வரத்து குறைந்திருப்பதால், அதன் விலை அதிகரித்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள உருளைக்கிழங்கு வணிகர்கள், தங்களது கிடங்கில் இருந்து அனைத்து உருளைக்கிழங்குகளையும் விற்பனைக்கு அனுப்பிவிட்டு, ஜனவரி மாதம் 2ம் வாரத்தில் புதிதாக விளையும் உருளைக் கிழங்குகளை பத்திரப்படுத்தத் தேவையான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். உருளைக் கிழங்கு விளைச்சலின் ஒரு பருவக்காலம் முடிந்து, அடுத்த பருவக் காலத்துக்காகக் காத்திருக்கும் நேரம் இது. எனவே, புதிய பருவக்காலத்தில் விளைந்த உருளைக் கிழங்கு வரும் வரை அதன் விலை உயர்ந்தே இருக்கும் என்கிறார்கள் வியாபாரிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.