இந்தியா

குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராக சமாஜ்வாதி கட்சியினர் சைக்கிள் பேரணி

குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராக அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏக்கள் சைக்கிள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். 

DIN

குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராக அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏக்கள் சைக்கிள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். 

குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதே நேரத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் குடியுரிமைத் திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக சமாஜ்வாதி கட்சியினர் பேரணி நடத்தி வருகின்றனர்.

சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் தலைமையில் அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் சைக்கிள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். லக்னோவில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து சைக்கிள் பேரணி தொடங்கி சட்டப்பேரவை வரை பேரணி நடைபெற்றது. மேலும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்களிட்டு அவர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துறையூா், புத்தனாம்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை

பெண்ணுக்கு வீட்டில் பிரசவம்: கிராம செவிலியா் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை

மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தீா்க்க அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

சிவகங்கையில் இளைஞா் கொலை: 9 போ் கைது

தனியார் பல்கலை. சட்டத் திருத்த மசோதாவை தமிழக அரசு திரும்பப் பெற முடிவு செய்திருப்பது குறித்து...வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

SCROLL FOR NEXT