இந்தியா

குஜ்ஜார் உட்பட 5 பிரிவினருக்கு 5 சதவீத இடஒதுக்கீடு: ராஜஸ்தான் அரசு

குஜ்ஜார் உட்பட 5 பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு வழிவகுக்கும் வகையில் ராஜஸ்தான் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான சட்டத் திருத்த மசோதா ராஜஸ்தான் அரசு அறிமுகம்

DIN


குஜ்ஜார் உட்பட 5 பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு வழிவகுக்கும் வகையில் ராஜஸ்தான் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான சட்டத் திருத்த மசோதாவை ராஜஸ்தான் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. 

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 5 சதவீத இடஒதுக்கீடு கோரி குஜ்ஜார், ரைகா-ரேபரி, கடியா லூஹார், பஞ்சாரா, கடாரியா ஆகிய பிரிவினர் ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 5 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

இந்நிலையில், குஜ்ஜார் மற்றும் மற்ற 4 பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் வகையில் ராஜஸ்தான் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான சட்டத் திருத்த மசோதாவை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மசோதாவை அம்மாநில சட்டப்பேரவையில் அமைச்சர் பிடி கல்லா தாக்கல் செய்தார். 

இந்த சட்டத்திருத்த மசோதா பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 21 சதவீதத்தில் இருந்து 26 சதவீதமாக உயர்த்தவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை அதிரடி குறைவு! இன்றைய நிலவரம்!

எச்சரிக்கை! மால்வேர் தாக்குதல்கள் படுமோசம்!

கிருஷ்ணகிரியில் நவராத்திரி விழா நிறைவு: 14 கோயில்களின் தேர்கள் அணிவகுப்பு!

அமெரிக்காவின் அவமதிப்பை இந்தியர்கள் ஏற்க மாட்டார்கள்! புதின்

முதல்வர் ஸ்டாலின், நடிகை திரிஷா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

SCROLL FOR NEXT