முகப்பு
இந்தியா

சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்தினருக்கு கிரிக்கெட் வீரர் முகமது ஷமி நிதியுதவி

 சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்தினருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி நிதியுதவி வழங்கினார். 

Updated On : 18 பிப்ரவரி, 2019 at 6:20 PM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 12:40 PM

புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்தினருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி நிதியுதவி வழங்கினார்.

ஒவ்வொரு சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்துக்கும் தலா ரூ.5 லட்சம் வழங்குவதாக அறிவித்தார். அதுமட்டுமல்லாமல், உதவி தேவைப்படும்போது எல்லாம் தான் துணை நிற்பதாகவும் உறுதியளித்தார்.

இதுகுறித்து முகமது ஷமி கூறுகையில், இந்திய அணிக்காக நாங்கள் விளையாடும் போது, நமது பாதுகாப்புக்காக ராணுவ வீரர்கள் தான் எல்லைப்பகுதிகளில் துணை நிற்கின்றனர். தற்போது அவர்கள் குடும்பத்தினருக்கு பாதுகாப்பாக நாம் அனைவரும் இருக்க வேண்டியது அவசியம் என்றார்.

Advertisement

முன்னதாக, வீரர்களின் குழைந்தைகளுடைய முழுக் கல்விச் செலவையும் ஏற்றுக்கொள்வதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் உறுதியளித்தார். அதுபோன்று துவக்க வீரர் ஷிகர் தவன் நிதியுதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.