இந்தியா

பிரியங்கா வந்திருப்பதால் என்னென்ன லாபம்? பட்டியலிடும் பாஜக தலைவர் 

தீவிர அரசியலில் பிரியங்கா காந்தி நுழைந்திருப்பதால் பாஜகவுக்கு கிடைக்கும் லாபங்களை பிகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி பட்டியலிட்டுள்ளார்.

PTI


பாட்னா: தீவிர அரசியலில் பிரியங்கா காந்தி நுழைந்திருப்பதால் பாஜகவுக்கு கிடைக்கும் லாபங்களை பிகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி பட்டியலிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச கிழக்குப் பகுதி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலராக பிரியங்கா காந்தி நேற்று நியமிக்கப்பட்டார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும்  பல்வேறு விதமான கருத்துகள் எழுந்த நிலையில், சுஷில் குமார் மோடி இது பற்றி கூறியிருப்பது என்னவென்று பார்க்கலாம்.

அதாவது, பிரியங்கா காந்தியின் அரசியல் பிரவேசம் மூலமாக, அவரது கணவர் மீதான மோசடி விவகாரங்களை கையிலெடுக்க வேண்டிய நல் வாய்ப்பு கிடைத்துள்ளது.

பிரியங்காவின் வருகைக்காக பாஜக கவலைப்படவில்லை. அவரது வருகையால் எங்களுக்கு பலன் கிடைக்கும் போது நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும். 

உத்தரப்பிரதேசத்தில் எஸ்பி-பிஎஸ்பி கூட்டணிக்கு மிரட்டல் விடுக்கவே பிரியங்கா காந்தி களமிறக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் வாக்குகளைப் பிரிக்க முயலுகிறது காங்கிரஸ். பாஜகவுக்கு எதிரான வாக்குகளை பிரித்தால் பயனடையப்போவது யார்? பாஜகவைத் தவிர வேறு யாருக்கு இதனால் பயன் ஏற்படும். 

அதில்லாமல், பல மோசடி வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட ராபர்ட் வதேராவின் பிரதிநிதியாகவே பிரியங்காவை மக்கள் பார்ப்பார்கள். மத்திய அரசியலில் இதன் மூலம் ராபர்ட் வதேராவின் மோசடிகளும் அம்பலத்துக்கு வரும் என்று கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சவரனுக்கு ரூ.800 உயர்ந்த தங்கம் விலை!

வங்கிக் கணக்கு தொடங்கினால் பணம் கிடைக்குமா? கல்லூரி மாணவர்கள் கவனத்துக்கு!

டைடல் பார்க்கில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணி: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

கால்பந்து வரலாற்றில் முதல்முறை... குராசோ தீவு உலக சாதனை!

“பாரன் டிரம்ப் ரொனால்டோவின் மிகப் பெரிய ரசிகன்”... வெள்ளை மாளிகையில் பிரமாண்ட விருந்தளித்த டிரம்ப்!

SCROLL FOR NEXT