முகப்பு
இந்தியா

உடனடியாக காங்கிரஸ் கட்சித் தலைவரை தேர்வு செய்ய வேண்டும்: சொன்னது இவரா?

தாமதிக்காமல், உடனடியாக புதிய காங்கிரஸ் கட்சித் தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:25 AM
பகிர்:


புது தில்லி: தாமதிக்காமல், உடனடியாக புதிய காங்கிரஸ் கட்சித் தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராகுல் கூறியிருப்பதாவது, நான் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டேன். இனி மேல் நான் காங்கிரஸ் தலைவர் இல்லை. காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் கூட்டப்பட்டு உடடினயாக புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும், இன்னும் கட்சியின் தலைவராகத் தொடர முடியாது  என்று ராகுல் வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் நீடிக்க வேண்டும் என்று கட்சித் தொண்டர்கள் பல கட்டப் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் ராகுல் இவ்வாறு பேசியுள்ளார்.

மாநில காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில் ஏராளமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும் அதனை ஏற்றுக் கொள்ள ராகுல் மறுத்துவிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.