இந்தியா

கொல்லூரு மூகாம்பிகை கோயிலில் வழிபட்ட இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க

கர்நாடக மாநிலம் கொல்லூரு மூகாம்பிகை கோயிலில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெள்ளிக்கிழமை வழிபட்டார்.

DIN


கர்நாடக மாநிலம் கொல்லூரு மூகாம்பிகை கோயிலில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெள்ளிக்கிழமை வழிபட்டார்.
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அவரது மனைவி மைத்ரீபாலா விக்ரமசிங்க ஆகியோர் இரண்டு நாள் ஆன்மிகப் பயணமாக இந்தியா வந்தனர். வெள்ளிக்கிழமை அவர்கள் கர்நாடக மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கொல்லூரு மூகாம்பிகை அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
இதனையொட்டி,  பக்தர்களுக்கு கோயிலுக்குள் செல்ல காலை முதல் பிற்பகல் வரை தடை விதிக்கப்பட்டிருந்தது.  உடுப்பி மாவட்ட ஆட்சியர் ஹெப்சிபாராணி கொரல்பட்டி மற்றும் உடுப்பி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் நிஷா ஜேம்ஸ் மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பூரணகும்ப மரியாதை வழங்கப்பட்டது.   கோயிலில் வழிபட்ட பின்னர் தனி ஹெலிகாப்டர் மூலம் மங்களூருக்கு சென்றார்.  
சனிக்கிழமை காலை கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்திலுள்ள கோயிலில் தரிசனம் முடித்துக் கொண்டு, மாலை இலங்கைக்கு திரும்ப உள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்திரேலிய பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

சாணைக்கல்லில் சிந்து எழுத்துகள்: தூத்துக்குடி பட்டினமருதூரில் கண்டெடுப்பு

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

மழை ஓய்ந்தும் வடியாத நீரால் அழுகும் நெற்பயிா்கள்: விவசாயிகள் வேதனை!

SCROLL FOR NEXT