உத்தரகாண்டில் கன மழை, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு: காணுங்கள் இந்த அரிய விடியோவை
உத்தரகாண்ட் மாநிலம் அல்மோராவில் நேற்று கன மழை பெய்ததன் காரணமாக ராம்கங்கா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
உத்தரகாண்ட் மாநிலம் அல்மோராவில் நேற்று கன மழை பெய்ததன் காரணமாக ராம்கங்கா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கீடா கிராமத்தில் ஏராளமான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. திடீரென பெய்த கன மழையால், கால்நடைகள் கட்டப்பட்டிருந்த கூடாரங்களுக்குள் வெள்ளம் புகுந்து ஏராளமான கால்நடைகள் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர் அதிகாரிகள் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு விரைந்துள்ளனர்.
அல்மோராவில் பெய்த கன மழையால், அப்பகுதியில் இருந்து சௌபாடியா பகுதிக்கு சேறு சகதிகளை அள்ளிக் கொண்டு வரும் ஆற்று நீரின் அரியக் காட்சி
Advertisement
வானம் பிய்த்துக் கொண்டு கொட்டியது போல பெய்த கன மழையால், பல பகுதிகளில் வெப்பம் தணிந்துள்ளது. காற்று மாசும் ஓரளவுக்குக் குறைந்துள்ளது.