இந்தியா

இன்று நீதி ஆயோக் கூட்டம்: தில்லியில் தமிழக முதல்வர்

DIN

தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் சனிக்கிழமை நடைபெறும் நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வெள்ளிக்கிழமை மாலை சென்னையில் இருந்து புறப்பட்டு இரவு தில்லி வந்தடைந்தார். 

விமான நிலையத்திலிருந்து பொதிகை தமிழ்நாடு இல்லம் வந்தடைந்த முதல்வரை தமிழ்நாடு அரசின் முதன்மை உள்ளுறை ஆணையர் (தமிழ்நாடு இல்லம்) ஆஷிஷ் வச்சானி வரவேற்றார். 

பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக நீதி ஆயோக் கூட்டம் தில்லியில் நடைபெறுகிறது. சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்களும், தலைமைச் செயலாளர்களும், மத்திய அமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர். 
சுமார் 6 மணி நேரம் நடைபெறவுள்ள இக்கூட்டத்தின்போது,  பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் பழனிசாமி தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநில சிலம்பம் போட்டியில் சங்ககிரியைச் சோ்ந்த மாணவா்கள் வெற்றி

ஈரான் மீன்பிடிப் படகு கேரளத்தில் தடுத்து நிறுத்தம்: 6 தமிழா்களை கடலோர காவல் படை கைது செய்து விசாரணை

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை: சிறிதளவே உயா்ந்தது சென்செக்ஸ்!

கல்வித் துறையில் தொடா் முன்னேற்றம், இந்தியாவை விக்சித் பாரத்க்கு நெருக்கமாகக் கொண்டு செல்கிறது: குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பெருமிதம்

தில்லியில் கொலை வழக்கு கைதி போலீஸ் பிடியில் இருந்து தப்பினாா்

SCROLL FOR NEXT