முகப்பு
இந்தியா

மருத்துவ சிகிச்சையில் இருக்கிறேன்: மாயமானதாகக் கதைக்கட்டப்பட்ட தேஜஸ்வி யாதவ் டிவீட்

ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் எங்கிருக்கிறார் என்று தெரியாமல் பல்வேறுக் கட்டுக் கதைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில், அவரே தனது இருப்பு குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:23 AM
பகிர்:


பாட்னா: ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் எங்கிருக்கிறார் என்று தெரியாமல் பல்வேறுக் கட்டுக் கதைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில், அவரே தனது இருப்பு குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பிகார் சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று எதிர்க்கட்சித் தலைவரான தேஜஸ்வி பங்கேற்கவில்லை. 

இதனால், அவர் எங்கிருக்கிறார் என்ற கேள்வியும், மாயமாகிவிட்டதாக விமரிசனங்களும் எழுந்தன.

இந்த நிலையில், தேஜஸ்வி வெளியிட்டிருக்கும் டிவிட்டர் பதிவில், நண்பர்களே, கடந்த சில நாட்களாக நான் மருத்துவ சிகிச்சையில் இருக்கிறேன். எதிர்க்கட்சிகள் நான் மாயமாகவிட்டதாகக் கூறி கிளப்பிய கட்டுக்கதைகளால் ஆச்சரியம் அடைந்தேன். சில ஊடகங்களும் இது தொடர்பாக சுவாரஸ்யக் கதைகளை வெளியிட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி, மே 29ம் தேதிக்குப் பிறகு எங்கிருக்கிறார் என்று தெரியாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
 

முழு கட்டுரையைப் படிக்க →