இந்தியா

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை: பிரபல அரசியல் தலைவர் ‘திடீர்’ அறிவிப்பு 

DIN

புணே: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று தேசியவாதக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் அறிவித்துள்ளார்.

ஞாயிறன்று நாடாளுமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்பவார் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மதா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என அவரது கட்சியின் பெரும்பாலான தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று தேசியவாதக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் அறிவித்துள்ளார்.

புணே நகரில் திங்களன்று செய்தியாளர்களைச் சந்தித்த சரத்பவார் கூறியதாவது

இதுவரை 14 தேர்தல்களில் போட்டியிட்டு நான் வெற்றி பெற்றிருக்கிறேன். தற்போது என்னை தலைவராக உறுதிப்படுத்த 15-வது தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை.

அத்துடன் என் குடும்பத்தை சேர்ந்த இருவர் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதால் நான் போட்டியிட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’ரயில் பெட்டியின் ‘கோடை குளியல்’

குறைவான மதிப்பெண் பெற்றவா்கள் மனம் தளராதீா் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை

திமுக தண்ணீா் பந்தல் திறப்பு

ஆம் ஆத்மி- காங்கிரஸ் இடையே விரிசல்? ஆம் ஆத்மி தெற்கு தில்லி வேட்பாளா் பதில்

நாகா்கோவில் சிறப்பு ரயில் தாமதமாக இயக்கம்

SCROLL FOR NEXT