இந்தியா

ஒய்எஸ்ஆர் சகோதரர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்: சந்திரபாபு நாயுடு

DIN

ஆந்திர மாநில முன்னாள் முதல்வவர் ஒய்எஸ்ஆர் ராஜசேகர ரெட்டியின் சகோதரரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர், மக்களவையின் முன்னாள் உறுப்பினரும், ஆந்திரா மாநில முன்னாள் அமைச்சருமான ஒய்எஸ்ஆர் விவேகனாந்த ரெட்டி(68) கடப்பா மாவட்டம் புலிவென்டுலா நகரில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பால் காலமானர். 

இந்நிலையில், விவேகானந்த ரெட்டி கொலை செய்யப்பட்டிருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

விவேகானந்த ரெட்டி மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கின்றனர். ஆனால், அவருடைய உடலில் காயங்கள் உள்ளது. எனவே இது திட்டமிட்ட கொலையாக இருக்கக்கூடும். இந்த மரணம் தொடர்பாக பல்வேறு கேள்விகளுக்கு பதில் கிடைக்க வேண்டியுள்ளது.

சம்பவ இடத்தில் இருந்து தடயவியல் ஆதாரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன. எனவே இந்த மரணத்தின் மீதான சந்தேகம் அதிகரிக்கிறது. ஆதாரங்களை அழிப்பது மிகப்பெரிய குற்றச்செயலாகும்.

ஆனால், தற்போது விவேகானந்த ரெட்டி மரணத்துக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சிபிஐ விசாரணை கோருகிறது. அவ்வாறு ஒருவேளை இந்த வழக்கு சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டால், மத்திய அரசு அக்கட்சியினரை காப்பாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடும். அதுவே மாநில காவல்துறை விசாரித்தால், உண்மை குற்றவாளிகள் கண்டறியப்படுவார்கள் என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

SCROLL FOR NEXT