இந்தியா

முதல் லோக்பால் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி பினாகி சந்திர கோஷ் நியமனம்?

ஊழலுக்கு எதிராக விசாரணை நடத்தும் நாட்டின் முதல் லோக்பால் அமைப்பின் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பினாகி சந்திர கோஷ் நியமனம் செய்யப்பட உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.  

DIN

புது தில்லி: ஊழலுக்கு எதிராக விசாரணை நடத்தும் நாட்டின் முதல் லோக்பால் அமைப்பின் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பினாகி சந்திர கோஷ் நியமனம் செய்யப்பட உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.  

ஊழலுக்கு எதிராக விசாரணை நடத்தும் தன்னாட்சி அமைப்பாக கடந்த 2014 ல் லோக்பால் அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கொண்ட குழுவை பிரதமர் தலைமையிலான குழு முடிவு செய்யும். இந்தக்குழுவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் ஆகிய இருவரும் அடங்குவர்.

லோக்பால்  அமைப்பிற்கு விரைவில் தலைவரை நியமிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் வலியுறுத்தி இருந்தது.

இந்நிலையில் ஊழலுக்கு எதிராக விசாரணை நடத்தும் நாட்டின் முதல் லோக்பால் அமைப்பின் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பினாகி சந்திர கோஷ் நியமனம் செய்யப்பட உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான நியமனக்குழு அவரது நியமனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது என்றும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒரிரு நாளில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 ஆண்டுகள் பணியாற்றிய பினாகி சந்திர கோஸ்  2017-ல் பணி ஓய்வு பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! தேவையான ஆவணங்கள் என்ன?

இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

சுங்கச் சாவடி கட்டண விவகாரம்: போக்குவரத்துக் கழக அதிகாரி பதிலளிக்க உத்தரவு

பிகார் முதல் கட்டத் தேர்தல்! இன்றுடன் பிரசாரம் ஓய்வு!

SCROLL FOR NEXT