இந்தியா

அரக்கல் அரசி காலமானார்

கேரள மாநிலம், அரக்கல் சமஸ்தான அரசி ஆதிராஜா சுல்தானா ஃபாத்திமா முத்து பீவி, தலச்சேரியில் உள்ள தனது

தினமணி

கேரள மாநிலம், அரக்கல் சமஸ்தான அரசி ஆதிராஜா சுல்தானா ஃபாத்திமா முத்து பீவி, தலச்சேரியில் உள்ள தனது பூர்விக அரச இல்லத்தில் சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 86. வயது மூப்பு காரணமாக அவர் மரணடைந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
 அரக்கல் சமஸ்தான அரசியாக இருந்த சுல்தானா ஸைனபா ஆயிஷா பீவி கடந்த ஆண்டு காலமானதைத் தொடர்ந்து, 39-ஆவது அரசியாக ஆதிராஜா சுல்தானா ஃபாத்திமா முத்து பீவி பொறுப்பேற்றார். அரக்கல் அரச குடும்பத்தின் பாரம்பரியப்படி, இக்குடும்பத்தின் அரசிகள் அரக்கல் பீவி என்று அழைக்கப்படுவது வழக்கம். சுல்தானா ஃபாத்திமா முத்து பீவிக்கு, ஆதிராஜா கதீஜா சோபியா என்ற மகள் உள்ளார். கேரளத்தின் கண்ணூர் பகுதியும் லட்சத் தீவின் தெற்கு பகுதியும் அரக்கல் அரச குடும்பத்தின் ஆட்சியில் இருந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

SCROLL FOR NEXT