இந்தியா

இந்த மாவட்டங்களுக்கு மட்டும் ராகுலும், பிரியங்காவும் செல்லாதது ஏன்? கேட்கிறார் கேஜ்ரிவால்

PTI


புது தில்லி: பாஜகவுடன் காங்கிரஸ் கட்சி நேரடியாக மோதும் மாவட்டங்களான ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசங்களுக்கு ராகுலும், பிரியங்காவும் பிரசாரத்துக்கு செல்லாதது ஏன் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

கிழக்கு உத்தரப்பிரதேச காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி புது தில்லியிலேயே பிரசாரம் செய்து கொண்டு தனது நேரத்தை செலவிட்டு வருகிறார் என்றும் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

அதாவது, கேஜ்ரிவால் கூறியதாவது, பிரியங்கா காந்தி இந்தியத் தலைநகரில் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். ஆனால் ஏன் ராஜஸ்தானுக்கோ மத்தியப் பிரதேசத்துக்கோ செல்லக் கூடாது? ஆனால் உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கட்சிக்கு எதிராகவும், தில்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராகவும் மட்டுமே பிரசாரம் செய்கிறார்.

ஆனால் சகோதர சகோதரி இருவருமே, பாஜகவும் காங்கிரஸும் நேரடியாக மோதிக் கொள்ளும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசங்களில் பிரசாரத்துக்குச் செல்லவில்லை என்று கேஜ்ரிவால் சுட்டிக்காட்டியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT