'கிச்சடி' அரசுகளிடம் கவனமாக இருங்கள்: முதல்முறை வாக்காளர்களை எச்சரித்த மோடி
'கிச்சடி' அரசுகளிடம் கவனமாக இருங்கள் என்று முதல்முறை வாக்காளர்களை தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.
ஆஸம்கார்: 'கிச்சடி' அரசுகளிடம் கவனமாக இருங்கள் என்று முதல்முறை வாக்காளர்களை தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் ஆஸம்காரில் வியாழனன்று தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் சுமார் 40 ஆயிரத்திற்கும் அதிகமான முதல் முறை வாக்காளர்கள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
'கிச்சடி' போன்று உருவாக்கப்படும் கூட்டணி அரசுகளிடம் கவனமாக இருங்கள். இத்தகைய அரசுகள் அராஜகத்தையும் நிலையற்ற தன்மையையும் கொண்டு வந்து சேர்க்கும்.
Advertisement
Advertisement
இருபது வருடங்களுக்கு முன்பாக ஐக்கிய முன்னணி அரசானது நிலையற்ற தன்மையையும் ஆட்சிக் காலத்திற்கு முன்பே தேர்தல்களையும் கொண்டு வந்தது.
அதேபோல் ஐக்கிய முற்போக்கு கூட்டணியானது தனது தொடர் ஊழல்களால் இந்தியாவே அவமானத்தில் தலைகுனியும்படி செய்தது. அத்தகைய அரசுகள் சவால்களை எதிர்கொள்ள இயலாதவை.
எனது அரசானது எப்போதும் தனிப்பட்ட நலனை விட தேசத்தின் நலனையே முன்னிறுத்தி செயல்பட்டுள்ளது.
அதேபோல் மக்களுக்கான பல்வேறு பொது நலத் திட்டங்களை முன்னெடுக்கும் போது எனது அரசானது, ஜாதி அடிப்படையில் வேறுபாடு பார்ப்பது கிடையாது.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.