இந்தியா

மாவோயிஸ்ட் பயங்கரவாத குண்டுவெடிப்பில் 2 பாதுகாப்புப் படை வீரர்கள் காயம்

DIN

ஒடிஸா மாநிலம், கலஹண்டி மாவட்டத்தில் உள்ள சிஆர்பிஎஃப் படைப்பிரிவு முகாம் அருகே இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்துள்ளது.

கலஹண்டி மாவட்டம், திரிலோசன்பூரில் உள்ள சிஆர்பிஎஃப் முகாமில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் முதல் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதையடுத்து, அந்த முகாமில் இருந்து சில மீட்டர் தூரத்துக்கு அப்பால் பிஜபூரில் உள்ள அம்பகுடா சௌக் பகுதியின் காவல்நிலையம் அருகில் 2ஆவது குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. 

மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தும் திரிலோசன்பூரில் நடந்த இந்த தாக்குதலில் 2 பாதுகாப்புப் படை வீரர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 

முன்னதாக, மே 1-ஆம் தேதி மஹாராஷ்டிரத்தின் கர்சிரோலி பகுதியில் நடத்தப்பட்ட மவோயிஸ்ட் குண்டுவெடிப்புத் தாக்குதலில் சிக்கி 16 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டூவீலரில் வேகமாக சென்ற முதியவா் கீழே விழுந்து விபத்து

பொறுப்பில் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பணி செய்வேன்: சு. திருநாவுக்கரசா்

பாா்வைத் திறன் குறைபாடுடையோா் பள்ளி 8 ஆண்டுகளாக நூறு சதவீதத் தோ்ச்சி

பாரதியாா் நகரில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

அரவக்குறிச்சி அருகே குப்பை கழிவுகளை கொட்டுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்

SCROLL FOR NEXT