இந்தியா

நான் எப்போதும் அமைதி, வளர்ச்சிக்கு தான் முன்னுரிமை அளித்துள்ளேன்: இம்ரான் வாழ்த்துக்கு மோடி நன்றி

DIN

மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றதற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக, இம்ரான் கான் தனது ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் வெற்றி பெற்றதற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தெற்காசியப் பிராந்தியத்தில் அமைதி, வளர்ச்சி, வளம் ஆகியவற்றை ஏற்படுத்துவதற்காக, பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்றுவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். நல்வாத்துகளை தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

எங்கள் பகுதியில் அமைதி மற்றும் வளர்ச்சிக்காவே நான் எப்போதும் முன்னுரிமை அளித்துள்ளேன் என்று பிரதமர் மோடி பதிலளித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

SCROLL FOR NEXT