முகப்பு
இந்தியா

இந்தியாவின் ஒரே 'உராங்குட்டான்' வகைக் குரங்கான பின்னி மரணம் 

இந்தியாவில் இருந்த ஒரே 'உராங்குட்டான்' வகைக் குரங்கான பின்னி முதுமை காரணமாக புதனன்று மரணமடைந்தது.

Updated On : 30 மே 2019, 4:37 pm IST
பகிர்:

புவனேஷ்வர்: இந்தியாவில் இருந்த ஒரே 'உராங்குட்டான்' வகைக் குரங்கான பின்னி முதுமை காரணமாக புதனன்று மரணமடைந்தது.

இந்தியாவில் பராமரிக்கப்பட்டு வந்த ஒரே 'உராங்குட்டான்' வகைக் குரங்கின் பெயர் பின்னி ஆகும். முதலில் புனே மாநிலத்தில் உள்ள ராஜீவ் காந்தி உயிரியல் பூங்காவில் இது வைக்கப்பட்டிருந்தது.

பின்னர் கடந்த 2003ஆம் ஆண்டு பின்னி ஒடிசா உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டது சமீபத்தில் 40 வயதை தாண்டிய நிலையில் பின்னிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதையடுத்து லண்டன் மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த உராங்குட்டான் சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனைப்படி அதற்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

Advertisement

Advertisement

கடந்த மூன்று நாட்களாக பின்னியின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், புதன் அன்று அது உயிரிழந்துள்ளது. அழிந்து வரும் உயி ரினமான உராங்குட்டான்கள் பொதுவாக 45 வயது வரை உயிர்வாழும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments