நிகோபார் தீவுகளில் நள்ளிரவில் நிலநடுக்கம்
நிகோபார் தீவுகளில் வியாழக்கிழமை நள்ளிரவு 12:01 மணியளவில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
நிகோபார் தீவுகளில் வியாழக்கிழமை நள்ளிரவு 12:01 மணியளவில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
வங்கக்கடல் பகுதியில் அமைந்துள்ள அந்தமான் நிகோபார் தீவுகளில் வியாழக்கிழமை நள்ளிரவு 12:01 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.0-ஆகப் பதிவானது. இதனை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் காரணமாக பொருள் சேதம் அல்லது உயிர்ச்சேதம் எதுவும் ஏற்பட்டவில்லை. இந்த நிலநடுக்கம் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.