2 நாட்களில் 3 நகரங்களில் இரவு நேரத்தில் நடைபெற்ற திடீர் அதிரடி சோதனையில் ரூ.20 கோடி மதிப்பிலான 50 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ரகசிய தகவல்களின் அடிப்படையில் குவாஹட்டி, சிலிகுரி மற்றும் வாராணசி ஆகிய 3 நகரங்களிலும் உள்ள பல்வேறு பகுதிகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் நவம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் இரவு நேரங்களில் திடீர் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நடைபெற்ற சோதனைகளின் முடிவில் மொத்தம் ரூ.20 கோடியே 40 லட்சம் மதிப்பிலான 51.66 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.