இந்தியா

மம்தாவுக்கு என் மீது பயமும், வெறுப்பும் ஏற்பட்டுள்ளதே மேற்கு வங்கத்தில் எனது வளர்ச்சிக்கு சாட்சி: ஓவைஸி

DIN

மேற்கு வங்கத்தில் எனது கட்சி வலுவாக வளர்ச்சியடைந்து வருவது அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு என் மீது ஏற்பட்டுள்ள பயமும், வெறுப்புமே சிறந்த சாட்சி என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைஸி விமர்சித்துள்ளார்.

முன்னதாக, மேற்கு வங்கத்தின் கூச் பெஹர் பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட அக்கட்சித் தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி பேசுகையில்,

மேற்கு வங்கத்தில் ஹிந்துத் தீவிரவாதிகள் போன்று சிறுபான்மையினர் ரூபத்தில் முஸ்லிம் தீவிரவாதம் பெருகி வருகிறது. இதை இங்கு வளர்ப்பதற்காக பாஜக-விடம் பணம் பெற்றுக் கொண்டு ஒரு கட்சி செயல்பட்டு வருகிறது. அந்த கட்சி மேற்கு வங்கத்தைச் சேர்ந்ததல்ல, ஹைதராபாத்தை மையமாகக் கொண்டது என ஓவைஸியையும், அவரது கட்சியையும் மறைமுகமாக சாடினார்.

இந்நிலையில், மம்தாவின் கருத்துக்கு பதிலடி தரும் விதமாக ஓவைஸி பேசியதாவது,

என் மீது தேவையற்ற அவதூறு பரப்புவதன் மூலம் மேற்குவங்கத்தில் உள்ள முஸ்லிம்கள் மத்தியில் இங்கு எனது கட்சி வலுப்பெற்றிருப்பதை உணர்த்தியுள்ளீர்கள். என் மீதும், எனது கட்சியின் மீதும் ஏற்பட்டுள்ள பயம் மற்றும் வெறுப்பின் காரணமாகவே இதுபோன்ற அவதூறு கருத்தை மம்தா பரப்பி வருகிறார். இதுவே மேற்கு வங்கத்தில் எனது வளர்ச்சிக்கு சாட்சி என ஓவைஸி விமர்சித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT