இந்தியா

மகாராஷ்டிர துணை முதல்வர் பதவியில் இருந்து அஜித் பவார் ராஜினாமா? முதல்வர் பட்னவீஸ்?

DIN


மகாராஷ்டிர துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்ததாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸிடம் தனது ராஜினாமா கடிதத்தை அஜித் பவார் அளித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நாளை மாலை 4 மணிக்குள் மகாராஷ்டிர சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், துணை முதல்வராக பதவியேற்று 4 நாட்களிலேயே அஜித் பவார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்த நிலையில், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸும், இன்று பிற்பகலில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். செய்தியாளர்களின் சந்திப்பின் போது தனது ராஜினாமாவை அறிவிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எதிரொலி: 8 மாவட்டங்களில் 2 கோடி கைப்பேசிகளுக்கு எச்சரிக்கைத் தகவல்கள்

இலவச கண் சிகிச்சை முகாம்...

தமிழகத்தில் குறைந்து வரும் வெப்பத்தின் தாக்கம்: மக்கள் நிம்மதி

மாட்டு வண்டியில் மணல் கடத்திய இருவா் கைது

மாவோயிஸ்டுகள் போல் பேசுகிறாா் ராகுல் - பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT