ராணுவ கமாண்டர் எஸ்.கே.சைனி 
இந்தியா

தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்?; ராணுவ கமாண்டர் அதிர்ச்சித் தகவல் 

தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக ராணுவ கமாண்டர் எஸ்.கே.சைனி அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

DIN

புது தில்லி: தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக ராணுவ கமாண்டர் எஸ்.கே.சைனி அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தில்லியில் திங்களன்று அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

தென்னிந்தியாவின் சில பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடக்கலாம் என தகவல் கிடைத்துள்ளது.

எனவே பயங்கரவாத செயல்கள் எதுவும் நேராமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்

பாகிஸ்தான் தொடர்ந்து பல்வேறு பயங்கரவாத இயக்கங்கள் மூலமாக இந்தியாவில் தாக்குதல்களைத் திட்டமிடலாம் என்று உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளது.

இதன் காரணமாக அசம்பாவிதங்களைத் தடுக்க உள்நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், மாநில அரசுகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் உளவு அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

சமீபத்தில் கூட குஜராத்தின் சர் கிரீக் பகுதியில்  ஆளில்லாத படகுகள் கேட்பாரற்று கிடந்துள்ளது. எனவே அதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

SCROLL FOR NEXT