இந்தியா

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரம் ஜாமீன் மனுவுக்கு சிபிஐ எதிர்ப்பு

DIN


ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ஜாமீன் கோரி, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு சிபிஐ வெள்ளிக்கிழமை எதிர்ப்பு தெரிவித்தது. அவருக்கு ஜாமீன் வழங்குவது, ஊழல் வழக்குகளில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும் என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2007-இல் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெற்றது. இந்த நிதியைப் பெறுவதற்காக, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக, சிபிஐ கடந்த 2017-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கின் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் கடந்த 2018-இல் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.
இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ கடந்த மாதம் கைது செய்தது. பின்னர், சிபிஐ காவலில் விசாரிக்கப்பட்ட அவர், கடந்த 5-ஆம் தேதி நீதிமன்றக் காவலில் திகார் சிறைக்கு அனுப்பப்பட்டார். அவரது நீதிமன்ற காவலை அக்.3-ஆம் தேதி வரை நீட்டித்து, தில்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டது.
இதனிடையே, தனக்கு ஜாமீன் கோரி, தில்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். 
அந்த மனு மீது பதிலளிக்கும்படி, சிபிஐ-க்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, சிபிஐ வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த பதிலில், ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நிதி முறைகேட்டின் தீவிரம், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அவரது ஜாமீன் மனுவை நிராகரிக்க வேண்டும்; அவருக்கு ஜாமீன் வழங்குவது, ஊழல் வழக்குகளில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என்று சிபிஐ தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT