ஆந்திரப்பிரதேசத்தில் மேலும் 34 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 226 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஆந்திரப்பிரதேசத்தில் இன்று மட்டும் 34 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலமாக அம்மாநிலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 226 ஆக அதிகரித்துள்ளது.
ஆந்திரப்பிரதேச சுகாதாரத்துறை இத்தகவலை உறுதி செய்துள்ளது.