இந்தியா

ஜார்க்கண்டில் 72 வயது முதியவர் கரோனாவுக்கு முதல் பலி!

PTI

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுச் சுகாதாரத்துறை அதிகாரி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். 

போகாரோ மாவட்டத்தில் 72 வயதான முதியவர் கடந்த ஏப்ரல் 5-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்கையில், அவருக்கு கரோனா அறிகுறி இருப்பதாக உறுதிசெய்யப்பட்டது. 

கரோனா சிறப்பு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு அவருக்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு உயிரிழந்துள்ளதாகத் தலைமை மருத்துவ அதிகாரி அசோக் குமார் பதக் தெரிவித்தார். 

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 4 பேருக்கு கரோனா உறுதியான நிலையில், இது முதல் பலி ஆகும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

SCROLL FOR NEXT