காஷ்மீரில் கரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 207ஆக உயர்வு
காஷ்மீரில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 207ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாகாஷ்மீரில் கரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 207ஆக உயர்வு
காஷ்மீரில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 207ஆக உயர்ந்துள்ளது.
காஷ்மீரில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 207ஆக உயர்ந்துள்ளது.
கரோனா தொற்றானது இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகத்துக்கே மிகப்பெரிய சவாலாக உள்ளது. அந்த வைரஸால் இந்தியாவில் இதுவரை 6,761 பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 896 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் காஷ்மீரில் கரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 207ஆக உயர்ந்துள்ளது. அதில் 39 பேர் ஜம்முவிலும், 168 பேர் காஷ்மீரிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீரின் முதன்மைச் செயலாளர் ரோகித் கன்சால் தெரிவித்துள்ளார்.