ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி டிவிட்டரில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “சிறப்புமிக்க ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு உங்கள் ஒவ்வொருவருக்கும் நல்வாழ்த்துகள். இயேசுபிரானின் உன்னதமான சிந்தனைகளை, குறிப்பாக ஏழைகளுக்கும், வறியவர்களுக்கும் அதிகாரம் அளிக்க வேண்டும் என்ற அவரது உறுதியான கடப்பாட்டை நினைவு கூர்வோம்.
இந்த ஈஸ்டர் பண்டிகை, கொவிட்-19 தொற்றிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வருவதற்கும், ஆரோக்கியமான புவியை உருவாக்குவதற்கும் நமக்கு கூடுதல் வலிமையை அளிக்கட்டும்”. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். உலகம் முழுவதும் இன்று ஈஸ்டர் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.