மேற்குவங்கத்தில் கரோனாவுக்கு 120 பேர் பாதிப்பு, 7 பேர் பலி: மாநில சுகாதாரத்துறை
மேற்குவங்கத்தில் கரோனாவுக்கு இதுவரை 120 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேற்குவங்கத்தில் கரோனாவுக்கு இதுவரை 120 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகதாரத்துறை தெரிவித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. கரோனா வைரஸால் இந்தியாவில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 350க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
மாநிலங்களைப் பொருத்தவரையில் கரோனா பாதிப்பில் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில் மேற்குவங்கத்தில் கரோனாவுக்கு இதுவரை 120 பேர் பாதிக்கப்பட்டிருப்பததோடு 7 பேர் பலியாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் மாநிலத்தில் இதுவரை 3081 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அதேசமயம் 439 பேர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.