கர்நாடகத்தில் மேலும் ஒருவர் பலி: உயிரிழப்பு 13 ஆக உயர்வு
கர்நாடகத்தில் 66 வயது முதியவர் கரோனா நோய்த் தொற்றுக்குப் பலியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: கர்நாடகத்தில் 66 வயது முதியவர் கரோனா நோய்த் தொற்றுக்குப் பலியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 10-ம் தேதி விக்டோரியா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 66 வயது முதியவர் வென்டிலேட்டர் மூலம் சுவாசித்து வந்தார் இந்நிலையில் அவருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார். இதுவரை கரோனா நோய்த் தொற்றுக்கு 13 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.