இந்தியாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்குகிறது
இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
இந்தியாஇந்தியாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்குகிறது
இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே மாதம் 3-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறித்தார். இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், பலியானவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,656-லிருந்து 18,601-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் பலியானவர்களின் எண்ணிக்கை 550-லிருந்து 590-ஆக உயர்ந்துள்ளது.
அதேமசயம் கரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,842-லிருந்து 3,252-ஆக உயர்ந்துள்ளது.