முகப்பு
இந்தியா

பஞ்சாபில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்: சுகாதாரத்துறை அமைச்சர் 

பஞ்சாபில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பல்பீர் சிங் சித்து தெரிவித்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:31 PM
பகிர்:

பஞ்சாபில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பல்பீர் சிங் சித்து தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மே மாதம் 3-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவையொட்டி கடைகள், வா்த்தக நிறுவனங்கள், திரையரங்குகள், மால்கள் உள்ளிட்ட அனைத்தும் நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. 

எனினும், ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் தொழிற்சாலைகள், கட்டுமானம் உள்ளிட்ட சில செயல்பாடுகள் மேற்கொள்ளலாம் என மத்திய அரசு ஊரடங்கில் தளா்வை அறிவித்தது. இந்த நிலையில் பஞ்சாபில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பல்பீர் சிங் சித்து தெரிவித்துள்ளார். 

மேலும் இதுதொடர்பாக அனைத்துதுறை அதிகாரிகளுடம் முதல்வர் ஆலோசனை நடத்துவார் என்றும் அவர் கூறியுள்ளார். பஞ்சாபில் கரோனாவால் இதுவரை 298 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 67 பேர் குணமடைந்த நிலையில் 17 பேர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.  

முழு கட்டுரையைப் படிக்க →