திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் இன்று புதிதாக 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, கேரளத்தில் 3 சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஒரு பத்திரிகையாளர் உட்பட 10 பேருக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 495 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது கேரளத்தில் கரோனா பாதித்து 123 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.